புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்க பொது செயலர் பார்த்திபன் கூறியதாவது: மொத்தம், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில், செப்., 2ல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில், வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த, 12 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். உதவியாளர் முதல் தாசில்தார் வரை யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வருவாய் துறையில், மாநில அளவில், 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பணிச் சுமை
ஏற்பட்டுள்ளது. பணியிடங்களை மாநில அரசு விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சங்க பொது செயலர் பார்த்திபன் கூறியதாவது: மொத்தம், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில், செப்., 2ல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில், வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த, 12 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். உதவியாளர் முதல் தாசில்தார் வரை யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வருவாய் துறையில், மாநில அளவில், 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பணிச் சுமை
ஏற்பட்டுள்ளது. பணியிடங்களை மாநில அரசு விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.