திங்கள், 11 ஜூலை, 2016

ஆதார் விபரம் வழங்காமல் உள்ள வாடிக்கையாளருக்கு, செப்டம்பர் முதல், மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

மத்திய அரசின், நேரடி மானிய திட்டத்தின் கீழ், வீட்டு காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தொகையை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் நேரடியாக வரவு வைக்கின்றன.

இந்த திட்டத்தில் இணைய, வாடிக்கையாளரிடம் இருந்து, வங்கி அல்லது, 'ஆதார்' விபரங்களை, எண்ணெய் நிறுவனங்கள் வாங்கின. தற்போது, அனைவருக்கும், 'ஆதார்' விபரம் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆதார் விபரம் வழங்காமல் உள்ள வாடிக்கையாளருக்கு, செப்டம்பர் முதல், மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

இந்நிலையில், 'காஸ் ஏஜன்சிகளிடம், உங்களின் ஆதார் விபரங்களை தராவிட்டால், மானியம் நிறுத்தி வைக்கப்படும். அதை சமர்ப்பித்தால், மானிய தொகை வழங்கப்படும்' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலம், வாடிக்கையாளர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றன. இதனால், ஆதார் விபரங்களை வழங்காதவர்கள், காஸ் ஏஜன்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.