தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்க ஹிந்தி மொழி ஒரு கருவியாகப் பயன்படும் என்ற நோக்கத்துடன் "தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா'வை 1918-இல் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அத்துடன் தனது மகன் தேவதாஸ் காந்தியை ஹிந்தி பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். 1936 முதல் தமிழகத்தில் ஹிந்தி பிரசாரத்தை திருச்சியில் உள்ள தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஏற்றுக் கொண்டது.
நிர்வாக வசதிக்காகவும், பிரசாரப் பணிக்காகவும் தென்மாநிலங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன.