ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை

இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; படிப்பு அவசியம் இல்லை என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமைவீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால்சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாகபடிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால்பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக,என்.எஸ்.எஸ்.ஓ.எனப்படும்தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்துஎன்.எஸ்.எஸ்.ஓ.ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 
வயது முதல், 29 வயது வரையுள்ள நபர்களிடம்பள்ளிப்படிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 100 பேரில், 13பேர்படிப்பு அவசியம் இல்லை எனக் கருதுவதால்பள்ளியில் சேரவில்லை என்றோபடிப்பை பாதியில் விட்டு விட்டதாகவோ தெரிவித்தனர். 10 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளிடையேஇந்த விகிதாச்சாரம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த பிரிவில்மூன்று பேரில்ஒருவர்படிப்பு அவசியம் இல்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10 ஆண்டுக்கு முன்இதே போன்று நடந்த ஆய்வில்நான்கில் ஒருவர் மட்டுமேஇதுபோன்ற பதிலை அளித்திருந்தனர். கிராமப்புறங்களில் அதிகமாக, 34.8 சதவீதம் பேர்பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. நகர்ப்புற குழந்தைகளை பொறுத்தவரை, 22.8 சதவீதம் பேர்பள்ளிப் படிப்பு அவசியமில்லை எனக் கூறி உள்ளனர். அதேசமயம்வயது அதிகமானோரில்குறைந்த விகிதத்தினரேபடிப்பு அவசியமில்லை எனத் தெரிவித்தனர். 15 முதல் 19 வயதுக்கு உட்பட்டபள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு 100 பேரில், 17 பேர் மட்டுமே,பள்ளி படிப்பு அவசியமில்லை எனத் தெரிவித்தனர். 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 12 சதவீதத்தினரே,இந்த பதிலை கூறியிருந்தனர். 
மொத்தத்தில், 5 வயது முதல், 29 வயதுக்கு உட்பட்டோரில் பெரும்பாலானோர்வீட்டில் போதிய வருவாய் இல்லாமையால்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த காரணத்தை, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 26சதவீதம் பேர்வீட்டு வேலைகளை கவனிக்கபடிப்பை விட்டதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் 50 சதவீதம் பேர்வீட்டு வேலைகளை கவனிக்கபடிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். பெரும்பாலான பெண்கள்,திருமணம் காரணமாகபடிக்க தொடர முடியவில்லை. உலக நாடுகளை ஒப்பிடுகையில்இந்தியாவில்,பெண்களுக்கு திருமணம் செய்யும் வயதுகுறைவாக உள்ளது. அதனால்சிறுவயதிலேயேபெண்களின் படிப்பை நிறுத்தி விட்டுஅவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 
கிராமப்புறங்களில்இவ்வழக்கம் அதிகமாக உள்ளது. ஆண்களை பொறுத்தவரை, 15 வயது ஆனபின்வீட்டுத் தேவைக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால்படிப்பை பாதியில் கைவிடுவது அதிகமாக உள்ளது. சொந்த மாநிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வசிப்பவர்களின் குழந்தைகளுக்குகல்வி வசதி எளிதாக கிடைப்பதில்லை. இருப்பிடச் சான்றுஇடமாற்று சான்று போன்ற நடைமுறை சம்பிரதாயங்கள்,இவர்களின் கல்விக்கு தடைக்கல்லாக உள்ளன. இவ்வாறுஎன்.எஸ்.எஸ்.ஓ.ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாகடில்லி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்ததுணை பேராசிரியர் ஜெயன் ஜோஸ்தாமஸ் கூறுகையில்நாட்டில் கல்விக்கான தேவைஅதிகமாகி உள்ளது. அதிகம் பேர்பள்ளிகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர். ஆனால்கல்வி கட்டமைப்புதரம்ஆசிரியர்களின் திறன்போன்றவைகுறிப்பிடும்படி இல்லை;எனவேபலர்பாதியில் படிப்பை விட்டு விடுகின்றனர் என்றார். 
டில்லிஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகையில்நாட்டின் கல்வி முறைபடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. பள்ளிகல்லுாரிகளை மாற்றுவதை விடசெய்யும் வேலையை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கு நீண்ட காலம் செல்லாத குழந்தைமீண்டும் பள்ளியில் சேர்வது மிகக் கடினம் என்றார்.