GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 12 மார்ச், 2015

கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்து தேர்வு, மார்ச், 15ல் நடத்தப்படுகிறது

"சேலம் மாவட்டத்தில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்து தேர்வு, மார்ச், 15ல் நடத்தப்படுகிறது. சேலம் கலெக்டர் மகரபூஷணம் விடுத்துள்ள அறிக்கை:
கற்கும் பாரதம் எழுத்தறிவு திட்டம், 2009 முதல் அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி, 14 முதல், 35 வயதுக்கு உட்பட்ட எழுத படிக்க தெரியாத பெண்களுக்கு, எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேலம், தர்மபுரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், இத்திட்டம் அமலில் உள்ளது. சேலம் மாவட்டத்தில், 3.51 லட்சம் பெண்களுக்கு, எழுத்தறிவு பயிற்சி வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவற்றோருக்கு பயிற்சி வழங்குவதற்காக, ப்ளஸ் 2 முடித்த இளைஞர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பயிற்சி பெற்றவரின் திறன் அறிய, ஆண்டு தோறும் மார்ச், ஆகஸ்ட் மாதங்களில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 15ம் தேதி அடிப்படை எழுத்து தேர்வு நடக்கிறது. இதில், 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், காலை, 10 மணி முதல் மாலை, 5 மணி வரை கற்போர்களுக்கு வசதியான நேரத்தில் வந்து, மூன்று மணி நேரம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தேர்வுக்கு தேவையான விடைத்தாள், பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்படும், சேலம் மாவட்டதில் இத்தேர்வு எழுத இதுவரை, 86 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை, மத்திய அரசின் சார்பாக தேசிய திறந்த வெளி பள்ளியும், தேசிய எழுத்தறிவு இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.