ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில் தற்காலிக மார்க் சீட் வழங்கப்படும் எனவும், இந்த மார்க் சீட்கள் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் எனவும் சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த தற்காலிக மார்க் சீட் வழங்கப்பட உள்ளதாகவும், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் மார்க் சீட்கள் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால், உடனே விடைத்தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா் நகல் கிடைக்கும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.