வெள்ளி, 16 ஜனவரி, 2015

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்போது அந்த பதவியிலிருக்கும் வி.எஸ்.சம்பத் நாளை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

64 வயதான பிரம்மா அஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு 65 வயதாக இன்னும் 3 மாதங்களே உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி இந்த பதவியில் அமர அதிகபட்சம் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  1975-ம் ஆண்டு பேட்ச்சில் ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரம்மா. மேலும், மத்திய அரசின் பவர் செக்ரட்டரியாகவும் இருந்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் பிரம்மா வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் 2-வது தலைமை தேர்தல் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.