B.PHARM,BSC NURSING, DIPLOMA NURSING உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பி பார்ம் பிஎஸ்சி நர்சிங் டிப்ளமோ நர்சிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7

ஞாயிறு, 15 ஜூன், 2025

தேர்வு குழு DIRECTORATE OF MEDICAL EDUCATION மருத்துவக் கல்வி இயக்ககம் கணினி வாயிலாக விண்ணப்பதாரர்கள் "எப்படி விண்ணப்பிப்பது" என்பதற்கான அறிவுரைகள்


தேர்வு குழு

DIRECTORATE OF MEDICAL EDUCATION

மருத்துவக் கல்வி இயக்ககம்

 

கணினி வாயிலாக விண்ணப்பதாரர்கள் "எப்படி விண்ணப்பிப்பதுஎன்பதற்கான அறிவுரைகள்

Instructions to the candidates "How to Apply" through online

 

READ THE GUIDLINES BEFORE FILLING THE ONLINE FORM

 

 

1.    Candidates are requested to read the Prospectus carefully and Check their eligibility before filling up the online application form.

விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தினை பதிவு செய்யும் முன் தகவல் தொகுப்பேட்டை கவனமாக படித்து பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.

2.    Candidate are expected to upload the necessary soft copies of passport size photo (between 50 KB and 100 KB in .jpg format), Signature (between 10 KB and 40 KB in .jpg format), and relevant documents (not exceeding 3 MB in .PDF file).

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் (3 MB க்குமிகாமல் .pdfதங்களது புகைப்படம் (50 kb லிருந்து 100 kb க்குள் .jpgமற்றும் கையொப்பத்தினை (10 kb லிருந்து 40 kb க்குள் .jpgஇணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

3.    Candidates are requested to provide their current mobile number and e-mail ID only. Once registered, Candidates should not change their mobile number and e-mail ID.

விண்ணப்பதாரர்கள் தற்பொழுது உபயோகிக்கும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மட்டும் உரிய இடத்தில் பதிவுசெய்யவும். பதிவு செய்தபின்விண்ணப்பதாரர்கள் தங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மாற்ற இயலாது.

4.    Candidates are advised to keep their mobile number active till the end of the admission.

விண்ணப்பதாரர்கள் சேர்க்கை முடியும் வரை தங்கள் அலைபேசி எண்ணை செயலில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5.    Click on edit and save buttons to make changes, till final submission. After final Submission no further changes can be made.

இறுதியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த (Final Submission) பின் அவ்விண்ணப்பத்தினை மாற்ற இயலாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

6.      After New Registration for login, please use Created Login ID and Password every time while you are logining in.

ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை எண்ணை மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.

7.    Candidates are requested to provide all necessary details in the application form. Before submission they are requested to verify whether you completed the required data and relevant documents.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்து சரிபார்த்த பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

8.    Application fee has to be paid only through online using Credit Card /Debit Card /Net banking/UPI.

விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/நெட் பேங்கிங் / யுபிஐ பயன்படுத்தி இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.

9.    If application fee transaction fails, the amount will be refunded to the respective account of the payee within 2-3 days by Payment Gateway.

ஏதேனும் பரிவர்த்தனை (விண்ணப்பக்கட்டணம்தோல்வி அடைந்தால் அத்தொகை தங்களது வங்கிகணக்கில் 2 அல்லது 3 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும்.

10.    On successful submission, the candidate will receive SMS through mobile about your Application Status.

விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தினை வெற்றி கரமாக பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

11.     After the successful payment of the application fee, the candidate can download and take print out of the filled-in Application (.pdf).

விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு தரப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

12.    Downloaded filled-in application is your reference, need not be sent it to selection committee by Post/ In-Person. Candidates who applied under Eminent Sports Person Quota have to submit their Filled-in Application Form and Relevant Sports Certificates in In-Person to Selection Committee, Directorate of Medical Education and Research.

பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தபால் மூலமாகவோ அல்லது தேர்வுக்குழுவிற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டியதில்லை. ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய விளையாட்டுச் சான்றிதழ்களை தேர்வுக் குழுமருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

13.     Candidate can't make any changes after successful submission of application.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்ய இயலாது.

 

 

 

  I have fully gone through prospectus and instructions for Online application form and I hereby accept all the rules and norms prescribed in it.
கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அறிவிக்கை மற்றும் கணினி வழியாக விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள் ஆகியனவற்றை முழுமையாக படித்து அதில் உள்ள நிபந்தனைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்படுகிறேன் என்று உறுதி அளிக்கிறேன்.

சனி, 7 ஜூன், 2025

ஐரோப்பியர்களின் வருகை -காலக்கோடு-time line

ஐரோப்பியர்களின் வருகை -காலக்கோடு-time line

போர்ச்சுக்கீசியர்கள்:

கி.பி. 1498 - வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
கி.பி. 1505-பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு முதல் கவர்னரானார்.
கி.பி. 1510 -அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார்.
கி.பி. 1530-நினோ-டி-குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
கி.பி. 1563-கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

டச்சுக்காரர்கள்:

கி.பி. 1602-நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது.
கி.பி. 1605-போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவைக் கைப்பற்றினர்.
கி.பி. 1623-அம்பாய்னா படுகொலை
கி.பி. 1690-தலைநகரை பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
கி.பி. 1795-டச்சு தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.

ஆங்கிலேயர்கள்:

கி.பி. 1600-ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தோற்றம்.
கி.பி. 1611-ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.
கி.பி. 1615-ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவின் வருகை.
கி.பி. 1639-பிரான்சிஸ் டே என்பவர் மெட்ராசை (சென்னை) சென்னப்ப நாயக்கரிடமிருந்து
குத்தகைக்குப் பெற்றார்.
கி.பி. 1668-பம்பாய் தீவு (மும்பை) ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து இரண்டாம்
சார்லஸ் மன்னனிடமிருந்து பெறப்பட்டது.
கி.பி. 1757-பிளாசிப்போர்.
கி.பி. 1764-பக்சார் போர்.
கி.பி. 1858-இந்தியா ஆங்கில அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

டேனியர்கள்:

கி.பி. 1616-டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினர்.
கி.பி. 1620-தரங்கம்பாடியில் (தமிழ்நாடு) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1676-செராம்பூர் (வங்காளம்) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1845-இந்திய டேனிய குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கிலேய அரசுக்கு விற்றனர்.


8th social science lesson 1 ஐரோப்பியர்களின் வருகை


1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா            
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை: இ) அல்போன்சோ-டி-அல்புகர்

2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு) 
ஆ ) போர்ச்சுகல் 
இ) பிரான்ஸ்
ஈ ) பிரிட்டன் 
விடை: ஆ ) போர்ச்சுகல் 

3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ் ஆ) துருக்கி
இ)  நெதர்லாந்து (டச்சு) 
ஈ) பிரிட்டன்
விடை: ஆ) துருக்கி

4. சர்வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் 
அ) போர்ச்சுக்கல்  
ஆ) ஸ்பெயின் 
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை: இ) இங்கிலாந்து

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
இ) டேனியர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை: ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி._______வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள் 
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை: ஈ) டேனியர்கள்

11. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI)_________ ல் அமைந்துள்ளது.
புது டில்லி 
2.போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோடயஸ்   _________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
இரண்டாம் ஜான் 
3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல்_________அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
போர்ச்சுகீசியர் 
4. முகலாயப் பேரரசர்_________ இந்தியாவில் ஆங்கிலேயர் வர்த்தகம்செய்ய அனுமதி அளித்தார்.
ஜஹாங்கீர் 
5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்_________என்பவரால்  நிறுவப்பட்டது.
கால்பர்ட் 
6. _________என்ற டென்மார்க் மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
நான்காம் கிறிஸ்டியன் 

III. பொருத்துக.

1) டச்சுக்காரர்கள்            -  1664         1602 
2) ஆங்கிலேயர்கள்          -  1602         1600  
3) டேனியர்கள்                   -  1600         1616 
4) பிரெஞ்சுக்காரர்கள்    -  1616         1664  

IV. சரியா, தவறா எனக் குறிப்பிடுக.

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.  சரி 
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும். சரி 
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தவறு 
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது. சரி 

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க.

i) 1) கவர்னர் நினோ-டி-குன்ஹா கொச்சியிலிருந்து கோவாவிற்கு போர்ச்சுக்கீசிய தலைநகரை மாற்றினார்.
2) போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3) டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4) இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ்ரோவை அனுப்பினார்.
அ) 1 மற்றும் 2 சரி
இ) 3 மட்டும் சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

VI. தவறான இணையைக் கண்டறிக.

அ) பிரான்சிஸ் டே                    -            டென்மார்க் 
ஆ) பெட்ரோ காப்ரல்               -            போர்ச்சுகல் 
இ) கேப்டன் ஹாக்கின்ஸ்      -            பிரிட்டன் 
ஈ) கால்பர்ட்                                  -            பிரான்ஸ் 

VII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறு குறிப்பு தருக.

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
* இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது.
இது கடந்தகால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்ள தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

*நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன.
* நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியால் வெளியிடப்பட்டது.
*கி.பி. 1935ல் ரிசர்வ் வங்கி முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.

3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

* போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார். எனவே அவர் "மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுகிறார்.

4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

i) பழவேற்காடு
ii) சூரத்
v) பாட்னா
vi) நாகப்பட்டினம்
vii) பாலசோர்
viii) கொச்சின்

5. இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக
மையங்களைக் குறிப்பிடுக.

i) சூரத்
ii) ஆக்ரா
v) மசூலிபட்டினம்
vi) சென்னை
iii) அகமதாபாத்
vii) பம்பாய்
iv) புரோச்
viii) கல்கத்தா
ix) ஹீக்ளி
X) சால்செட்

VIII.விரிவான விடையளி.

1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

நவீன இந்திய ஆதாரங்கள்:
* நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக
கலாச்சார முன்னேற்றங்களைப் பற்றி அறிய உதவுகின்றன.
பொருளாதார மற்றும் /தொடக்ககாலத்திலிருந்தே ஐரோப்பியர்கள் தங்களுடைய அலுவலகச் செயல்பாடுகளை தங்களது
அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்புமிக்க ஆதாரங்களாக உள்ளன.
எழுதப்பட்ட ஆதாரங்கள்:
* ஆவணக்காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாகும்.
எழுதப்பட்ட ஆதாரங்களின் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.
பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்கள்:
பல ஓவியங்கள் மற்றும் சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. அவை தேசியத் தலைவர்களின் சாதனைகளையும், வரலாற்றுப் பிரமுகர்கள் பற்றிய தகவல்களையும் நமக்குத் தருகின்றன.
*அருங்காட்சியகங்கள் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த உதவுகின்றன.
நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாகத் திகழ்கின்றன.
2. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

வாஸ்கோடகாமா:
1501ல் வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் இந்தியா வந்தடைந்து கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
பின்னர் கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை நிறுவினார்.
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா:
இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505ல் முதல் கவர்னரானார்.
இவர் இந்தியாவின் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் பின்பற்றிய கொள்கை "நீலநீர்க்கொள்கை" எனப்பட்டது.
அல்போன்சோ-டி-அல்புகர்க்:
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்புகர்க் ஆவார்.
இவர் 1510ல் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவா மற்றும் 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப்பகுதியில் அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
நினோ-டி-குன்கா:
1534ல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதி மற்றும் 1537ல் டையூவைக் கைப்பற்றினார்.
1548ல் சால்செட்டை ஆக்கிரமித்தார்.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்.

3. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

இங்கிலாந்து இராணி எலிசபெத் அனுமதியுடன் கி.பி.1600ல் ஆங்கில வணிகக் கம்பெனி நிறுவப்பட்டது.

1613ல் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியுடன் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையம் அமைக்கப்பட்டது.

சூரத் ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.
சர் தாமஸ்ரோ பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.

சர் தாமஸ்ரோ ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சென்னப்ப  நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
அங்கு புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.

1668ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவை மன்னர் இரண்டாம் சார்லஸிடமிருந்து பெற்றது.

1690ல் சுதாநுதி என்ற இடத்தில் ஒரு வணிக மையம் நிறுவப்பட்டது.
1700 சுதாநுதியில் (கல்கத்தா) வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

1757ல் பிளாசிப்போர், 1764ல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.


வெள்ளி, 6 ஜூன், 2025

எம்பிபிஎஸ் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் இந்த ஆண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் MBBS (இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான) விண்ணப்பப் பதிவு இன்று ஜூன் 6-ஆம் தேதி தொடங்குகிறது 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்குhttps://tnmedicalselection.net என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாநில மருத்துவ கல்வி இயக்ககம் மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன அதில் 88 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன இதைத்தவிர சுயநதி கல்லூரிகளில் 3450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 92 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது இதில் 496 இடங்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன பிடிஎஸ் இடங்களை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன இதில் ஆயிரம் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டிலும் 11,350 மாணவ மருத்துவர்  மாணவர சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் புதிதாக இடங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்