Website for Enhancing Educational,Social and cultural development
சனி, 27 ஜூலை, 2024
திங்கள், 22 ஜூலை, 2024
அலுவலக கடிதம் எழுதும் போது நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்கள் ... ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களின் சிறப்புரை.
அதில் நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்களை அளித்தார்கள்.
நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில தவறுகளை பொதுவாக செய்கிறோம். அவற்றை திருத்திக் கொள்வதற்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதில் சிலவற்றை தெரிந்து கொண்டு பின்வரும் காலங்களில் நாம் அவற்றை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
💐" தலைமை ஆசிரியர்" அன்று எழுதும் பொழுது நாம் துணை எழுத்து மேல் புள்ளி வைக்க கூடாது.
ர் என்று எழுதும் போது இவ்வாறு தான் எழுத வேண்டும்.
💥தலைமை ஆசிரியை என்ற ஒரு சொல் கிடையாது. ❌ ஆண்/ பெண் இருபாலரும் ஆசிரியர் தான் ஆசிரியை என்று குறிப்பிட கூடாது. ❌
ஆசிரியை என்று ஒரு சொல் கிடையாது.❌
💥 அதே போல் ஆங்கிலத்தில் HEADMASTER / TEACHER.. தான் சரி..
HEADMISTRESS என்பது தவறு.. ❌
💐 நாம் கடிதம் எழுதும் பொழுது பதவியை குறிக்கும் போது மேதகு/ மாண்புமிகு/ மதிப்பிற்குரிய போன்ற மரியாதை சொற்களை சேர்க்கத் தேவையில்லை. வட்டார கல்வி அலுவலர் /இயக்குநர்/ மேலாளர் இவை அனைத்தும் பதவியின் பெயர். அதனால் அவை அஃறினை சொல். அதனால் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் என்று எழுதத் தேவையில்லை. அனுப்புநர்/ பெறுநர் இதுவே சரியான சொல்லாகும். இச்சொல் முடியும்போது முற்றுப்புள்ளி /காற்ப்புள்ளி/ அரை புள்ளி இடத் தேவையில்லை.
💐 தொடக்கப்பள்ளி/ நடுநிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ இவை அனைத்தும் ஒரே சொல் தான். இவற்றை எழுதும்போது இடைவெளி விட்டு எழுத தேவை இல்லை.
💐 வடமொழிச் சொற்களை எழுதும்போது ஜூலை என்பதற்கு பதிலாக ஜீலை என்று எழுதுகிறோம். இது பொதுவான தவறாக உள்ளது.
💐கடிதம் எழுதும் போது
இடம்:
நாள்:
என்று தான் குறிப்பிட வேண்டும்.
💐 பொதுவாக இருவரும் என்று எழுதக்கூடாது. இரண்டு பேரும் என்று தான் வாக்கியம் வர வேண்டும் .
💐நாட்கள் என்று எழுதக்கூடாது. நாள்கள் என்று தான் எழுத வேண்டும்.
💐 தனியர்/ அன்னாரது என்று சொற்களை கடிதத்தில் பயன்படுத்தக்கூடாது. இவை காலம் சென்ற மனிதர்களையே குறிக்கக்கூடிய அஃறினை சொல்லாகும். அவற்றை நாம் கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதை தவிர்க்க வேண்டும்.
💐கடிதத்தை முடிக்கும் பொழுது கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று எழுதுகிறோம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்பதும் அஃறினை பொருட்களை குறிக்கும் சொல்லாகும். கேட்டுக்கொள்ள பெறுகிறீர்கள் என்றே முடிக்க வேண்டும்.
💐நம் பெயர் எழுதும்போது M என்ற initial எழுத்தை எம் என்று எழுதுகிறோம். அவ்வாறு எழுத கூடாது. பெயரின் முதல் தமிழ் எழுத்தாகிய ம என்ற எழுத்தையே எழுத வேண்டும்.
💐 திருவாளர் என்னும் சொல்லையே சுருக்கமாக திரு என்று குறிப்பிடுகிறோம்.
எடுத்துக்காட்டாக
திரு.மோகன் என்று எழுத வேண்டும். ஆனால் திருமதி என்பது முழு சொல்லாகும்.
அதனை எழுதும் பொழுது முற்றுப்புள்ளி வைக்க கூடாது.
திருமதி மோகனா என்று எழுத வேண்டும்.
இதைப் போன்று நிறைய பயனுள்ள தகவல்களை வழங்கினார்.நாம் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யாமலும் நம் மாணவர்களுக்கும் இக்கருத்துகளை கொண்டு செல்வோம் என்பதற்காக இப்பதிவு.
நன்றி..